Friday, August 19, 2011
சில இதயங்கள் ஏற்று கொள்ளவதில்லை நம் உணர்வுகளை
நிச்சயம் உணர்வார்கள்.... அவர்களின் உணர்வுகள் நசுக்கப்படும் போது.....
ஒரு வினாடியில் மாறி போகின்றன
எல்லாமே
நீயும்,
என்னில் நீ கொண்ட காதலும் .....
காலங்கள் கடந்த பின்பும்
உன்னுடன் நான் கை கோர்த்து நடந்த காலங்கள்
எனக்குள் என்றும் கடந்து போகாமல் இன்றும் பசுமையாய்....
நேற்று காதலனாய்
இன்று கணவனாய்........
எங்கிருக்கிறாய் என் தோழியே ....
அள்ளி அணைக்க வேண்டாம்
ஆறுதலாய் ஒரு வார்த்தை போதும்
கால் கடுக்க காத்திருக்க வேண்டாம்
கன நேரம் போதும்
முத்தத்தின் ஈரம் வேண்டாம்
முகத்தில் புன்னகை போதும்
கோபம் வேண்டாம்
கொஞ்சம் ஊடல் போதும்
எங்கிருக்கிறாய் என் தோழியே ....
காத்திருக்கிறேன் உன் மடியில் முகம் புதைக்க .......
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)