ஆயிரம் காரணம் அல்ல,
உன்னை இழந்ததற்கு,
ஒன்றே ஒன்று தான்,
என்னில் நீ கொண்டது காதல்
உன்னில் நான் கொண்டது காமம்.
உண்மையான காதலை புரிந்து கொண்டேன் உன்னை இழந்த பிறகு.
ஆயிரம் இதயங்கள் என்னை நேசித்தாலும்,
என்னை நேசித்த அந்த இதயம் என்னை புனிதமாக்கியது.
மன்னித்து ஏற்று கொள்வாயா இந்த ஆண் வேசியை....