Thursday, September 20, 2012



திசைக்கு ஒருவராக பிரிந்து கிடந்தாலும்..... 
எதேச்சையாக உன்னை பார்க்க நேரும் போது 
திக்கு தெரியாமல் திண்டாடி போகிறேன்.....

Monday, September 17, 2012


உடைந்து பெருக்கெடுக்கிறது உன் மேல் கொண்ட ப்ரியங்கள் ....

இப்பொது கண்ணீர் திவலைகளாய்.......

Friday, September 14, 2012



நான் தனிமை படுத்த படவில்லை 
சிறை பட்டு இருக்கிறேன் உன் நினைவுகளினால்


இதுவும் கடந்து போகும்.... 
யார் சொன்னது...

கடந்து போனது நீ மட்டும் தான் 
உன் நினைவுகள் இல்லை.....

Wednesday, September 12, 2012



நீயும் ஒரு அன்ன பறவை தான்...
என் உடலில் இருந்து உயிரை  மட்டும் உறிஞ்சி எடுத்து சென்றுவிட்டாய்....

Monday, September 10, 2012



நினைவுகளை தாண்டி சில நேரம் நீந்தி செல்ல முற்படும் போது....
நிற்காமல் தொடர்கின்றன உன் நினைவுகள் தொடர் அலைகளாய்......

Thursday, March 8, 2012

தோற்றுவிட்டேன்

எதிலும் தோற்றதில்லை என்ற கர்வம் எனக்குண்டு 
உன்னை சந்தித்த அந்த நிமிடம் வரை
தோற்றுவிட்டேன் உன்னிடத்தில் என்னை.......